முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மி ஆட்டம்!

நாமக்கல்லில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மி ஆட்டம்!

X
வள்ளி

வள்ளி கும்மி ஆட்டம்

Namakkal News | நாமக்கல் அருகே  கண்கவர் வள்ளி கும்மி ஆட்டம்,  100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள அம்மாபாளையம் புதூரில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் கோவில் விழாவை முன்னிட்டு கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது.

இந்த வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப் பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப் பட்டிருந்தது. இதில் கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினரும் நாமக்கல், ஆரியூர், தோளூர், மோகனூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இந்த ஆட்டத்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    First published:

    Tags: Local News, Namakkal