முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் ரூ.1.65 கோடிக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல்லில் ரூ.1.65 கோடிக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

X
200-க்கும்

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தன

Namakkal Cotton | நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்தவாரம் 1.65 கோடி ரூபாய்க்கு 5700 பருத்தி மூட்டைகள் ஏலம் போனது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,569 முதல் ரூ.8,461 வரையிலும், டிசிஎச் ரகம் ரூ.8,069 முதல் 8,609 வரையிலும் மட்ட ரகம் ரூ3,500 முதல் ரூ. 7,900வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 5700 பருத்தி மூட்டைகள் ரூ.1.65கோடிக்கு ஏலம் போனது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த வார ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,369 முதல் ரூ.8,635 வரையிலும்,மட்ட ரகம் ரூ4,299 முதல் ரூ. 7,200வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 5000 பருத்தி மூட்டைகள் 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது குறித்து பேசிய விவசாயிகள் கடந்த வாரங்களை விட இந்த வாரம் பருத்தியின் விலை சற்று குறைந்துள்ளதாகவும் வரும் காலங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal