சீர்காழி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பொதுமக்களையும் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு, மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட நிதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு தெரியாமலேயே பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமையாள்பதி ஊராட்சி தலைவர் கிள்ளிவளவன், அதிமுகவை சேர்ந்த காட்டூர் ஊராட்சி தலைவர் வடிவேல் மற்றும் திமுகவை சேர்ந்த முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் ஆகிய நான்கு பேர் புத்தூர் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தன்று விஷம் அருந்திய காதல் ஜோடி.. மணமகன் மரணம் - பகீர் தகவல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayiladuthurai, Tamil News