மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீமை நகராட்சி துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி துறையினர் நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில், திடீரென ஐஸ்கிரீம் தயாரித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க உரிய அனுமதி பெறாமல், சுகாதாரமற்ற முறையில் குல்பி ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: தங்கை மீது காதல்.. மறுத்த தந்தை.. நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்
செய்தியாளர்: கிருஷ்ணகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai