முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / மயிலாடுதுறை: மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தனியார் பள்ளி மாணவி...!

மயிலாடுதுறை: மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தனியார் பள்ளி மாணவி...!

ஷிவானி

ஷிவானி

Mayiladuthurai district 12th Board Results 2023 | மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 594 மதிப்பெண்களைப் பெற்று தனியார் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,594 பேர், மாணவிகள் 5,743 பேர் என மொத்தம் 10,337  தேர்வு எழுதியதில் 3,977 மாணவர்களும், 5342 மாணவிகளும் என 9,319 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சியை பொறுத்தவரை ஆண்கள் - 86.57 சதவீதமும், பெண்கள் - 93.02 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள - Tamil Nadu 12th Result 2023 Live 

மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி ஷிவானி பள்ளிக்கு வந்தார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை

top videos
    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Exam results, Mayiladuthurai