முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / தைக்கால் பிரம்பு பொருள் உற்பத்தி தொழிலுக்கு அரசு உதவ வேண்டும்- புவிசார் குறியீடு பெற்றநிலையில் வியாபாரிகள் கோரிக்கை

தைக்கால் பிரம்பு பொருள் உற்பத்தி தொழிலுக்கு அரசு உதவ வேண்டும்- புவிசார் குறியீடு பெற்றநிலையில் வியாபாரிகள் கோரிக்கை

சீர்காழி பிரம்புக்கு புவிசார் குறியீடு

சீர்காழி பிரம்புக்கு புவிசார் குறியீடு

Sirkazhi Rattan workers | ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சீயாளம், பெரம்பூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். 

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் பிரம்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பிரம்பைக் கொண்டு தயார் செய்யப்படும் பாரம்பரியப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசைத் தொழிலாக தொடங்கிய பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தற்போது இரண்டு கி.மீ தூரம் சாலை இருபுறமும் 200க்கும் மேற்பட்ட உற்பத்தி கூடங்களும் விற்பனையகங்களும் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பிரம்பு பொருட்கள் புவிசார் குறியீடு பெரும் அளவு பாரம்பரியமும் தரமும் வாய்ந்தது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது. பிரம்பு பொருட்களான நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில், பிரம்பு கூடைகள் மற்றும் மிகுந்த கலைநயம் மிக்க கைவினை பொருட்களும் உற்பத்தி செய்யபடுகின்றன. மேலும் பிரம்பினால் ஆன சேர், சோபாவில் உட்காரும் போதும் படுக்கும் போதும் உடல் சூட்டை பாதுகாத்து ரத்த ஓட்டத்தை சீராக்க கூடியது.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள துவாரபாலகர்களின் சிலைகள்.. பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்! 

ஆகையால் இதை அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பிரம்பு பொருட்கள் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சீயாளம், பெரம்பூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளே அதிகம் பிரம்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகள் நிறைவடைந்து விரைவில் புவிசார் குறியிடு கிடைக்க உள்ளதால் பிரம்பு பொருள் தயாரிக்கும் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தைக்கால் கிராமத்தை சேர்ந்த பிரம்பு பொருள் தயாரிப்பாளர் கூறுகையில், ’கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் விற்கப்படும் பிரம்பு வகைகள் முதல் தரம் 2ம் தரம் என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சேர், நாற்காலி, ஊஞ்சல் குழந்தை தொட்டில் ,குழந்தைகள் உட்காரும் நாற்காலி, முதியவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலி, சோபா செட் ஆகியவை கலை நயத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு விற்கப்படும் பொருட்கள் ரூ.750 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கி செல்கின்றனர் எனவும் தங்களது தொழிலை மேம்படுத்த கடன் உதவி வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை உள்ளிட்ட 11 பொருட்கள் வரிசையில் தைக்கால் பிரம்பிற்கும் புலி சார் குறியீடு கிடைக்க உள்ளதால் இங்கு தயார் செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விற்பனை சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: பிரசன்னா வெங்கடேசன், சீர்காழி.

    First published:

    Tags: Local News, Mayiladuthurai