கோயம்புத்தூரில் வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் ஈஷா யோகா மையம். சத்குருவினால் உருவாக்கப்பட்ட இந்த இடம் முக்கியமான ஆன்மீக தலமாக திகழ்ந்துவருகிறது. தியானலிங்கம் தான் ஈஷா யோகா மையத்தின் சிறப்பாக திகழ்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் உடல், மனநலம் தேடி இங்கு செல்கின்றார்கள்.
இந்த ஈஷா யோகா மையத்தில்ஒவ்வொரு ஆண்டும்மாசி மாதம் தேய்பிறையில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் பல்வேறு முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி பிப்ரவரி 18-ம் தேதி காலை 6:00 மணி முதல் மறுநாள் 6 மணி வரை ஈஷா யோகா மையத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த சிவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் ஈஷா யோகா மையம் சார்பாக வண்டியின் மூலமாக ரத யாத்திரை பவனி நடைபெற்று வருகின்றது.
வகுப்பறையில் புகுந்த 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு.. மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
இந்த ரத யாத்திரை பவனியில் பொதுமக்கள் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai