மதுரை என்றாலே மதுரை மல்லி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி 15ஆம் தேதிஅவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி காளைகள்,சிறப்பாக விளையாடியவீரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிற்கு அடித்தளமே காளைகள் தான். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்பேகாளைகளுக்குசத்தான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் கொடுத்து காளைகளை வாடிவாசலில் இறக்குவதற்கு ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் தயார்படுத்துவார்கள்.
காளைகளை மட்டும் வாடிவாசலில் இறக்கி விட்டால் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி நின்னு விளையாடிவிட்டு செல்லும்.
அந்த வகையில் மதுரையின் மேலமடைபிரகாஷ் வளர்த்த புலிக்காளை இந்த ஆண்டு அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்களை வீழ்த்தி சிறப்பாக ஆட்டம் காட்டி டிவி, சைக்கிள், தங்க நாணயங்கள், அண்டா, சேர் என பல்வேறு பரிசுகளை தட்டி தூக்கியது.
பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவிகள்.. 1 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட மதுரை போலீஸார்
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai