குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையம் வந்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரில் சென்றார். அவரை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார்.
பின்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருகை பதிவேட்டில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளேன். கோவிலின் பிரம்மாண்ட கோபுரங்கள், எழுச்சியூட்டும் சிற்பக்கலை, கட்டுமான அமைப்பு ஆகியவை தெய்வீக அனுபவத்தை அளித்தன. மக்கள் நலனுக்கும், தேசத்தின் செழிப்புக்கும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.