முகப்பு /மதுரை /

அலெர்ட்... மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை 

அலெர்ட்... மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை 

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (24-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலைய பகுதிகளிள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வண்டியூர் துணை மின் நிலைய பகுதிகளில் காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

சோழவந்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் கிளிட்டரா ஸ்கூல், மேலகால், தாராப்பட்டி, கச்சராயிருப்பு, கீழமட்டையான், மேல மடையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலகால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, மண்ணாடிமங்கலம், அயப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Must Read : ஊட்டியில் இப்படி ஒரு அருவி இருப்பதே பலருக்கும் தெரியாது! - அதிகம் பிரபலமில்லாத அட்டகாசமான சுற்றுலா இடங்கள்!

அதேபோல் வண்டியூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வண்டியூர் மாந்தோப்பு, தீர்த்தக்காடு, அனுமார்பட்டி, சவுராஷ்டிரபுரம், லெட்சுமிபுரம், சதாசிவம் நகர், மக்கள் மன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown