முகப்பு /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள்... டேங்கில் தண்ணீரை நிரப்பி வச்சுக்கோங்க

மதுரை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள்... டேங்கில் தண்ணீரை நிரப்பி வச்சுக்கோங்க

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (15-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின்வாரிய செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் தேவசேரி பீடர் மற்றும் அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?

இதனால் முடுவார்பட்டி, தேவசேரி, ஆதனூர், பண்ணைகுடி, மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம், பாறைப்பட்டி மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown