முகப்பு /மதுரை /

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

மாதிரி படம்

மாதிரி படம்

Southern Railways : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளையம்-நாங்குநேரி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரயில் 23ம் தேதி வரையிலும், மற்றும் நாளை (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரயில் ஆகியவை நெல்லை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும். அதேபோல் திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் நாளை (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தபுரம் இண்டர்சிட்டி ரயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதேபோல் வரும் 22ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து வரும் 23ம் தேதி புறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரயில் ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

இதையும் படிங்க : மதுரையின் முக்கிய பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 23ம் தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரயில் மற்றும் வரும் 24ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரயில் ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும் என மதுரை தென்னக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Southern railway