மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்று தான் மதுரை மல்லி. மதுரையின் மனம் மற்றும் தன்மை ஆகியவற்றின் காரணமாகத்தான் மதுரை மல்லிக்கென உலக அளவில் தனி மவுசு உள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள இப்பூச்சந்தையில் தேனி திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விளையும் மதுரை மல்லியும், கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களும் இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்து வரும் 3 நாட்களில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மதுரை மல்லி 2500க்கும், முல்லை 1300க்கும், பிச்சி 1200க்கும், சம்பங்கி 150-க்கும், செவ்வந்தி 200க்கும், பட்டன் ரோஸ் 250 க்கும், அரளி 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லி பூவின் விலை கிடு கிடு என உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பண்டிகை காலம் என்பதால் இன்னும் பூக்களின் விலை உயரும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Pongal 2023