மதுரையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடங்கி தற்போது வரை மதுரையில் மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மதுரையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மாலை 6:00 மணியிலிருந்து 7:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. அந்த வகையில் பெரியார் பேருந்து நிலையம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், அண்ணா நகர், வண்டியூர், மேலமடை, மாட்டுதாவணி போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோடை மழை மதுரையை குளிர்வித்தாலும் கடந்த சில நாட்களாகவே மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. மேலும் தற்போது மதுரையில் பல்வேறு பகுதிகளில் கள்ளழகர் சுற்றி வலம் வருவதை முன்னிட்டு கள்ளழகரை காண வண்டியூர், அண்ணா நகர், மேலமடை போன்ற பகுதிகளில் காத்திருந்த மக்களிடையே மழை பெய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Weather News in Tamil