முகப்பு /மதுரை /

மதுரை மக்களே உஷார்.. நாளை மதுரை டூ திருமங்கலம் அகல பாதையில் ரயில் சோதனை ஓட்டம்!

மதுரை மக்களே உஷார்.. நாளை மதுரை டூ திருமங்கலம் அகல பாதையில் ரயில் சோதனை ஓட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai - Thirumangalam Broadgauge Train Service | மதுரை திருமங்கலம் புதிய அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நாளை நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை - திருமங்கலம் இடையிலான 17 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதனை அடுத்து கடந்த பிப்ரவரிமாதம் 13, 14 ஆகிய தேதிகள் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளும் மின் மயமாக்கல் இணைப்பு பணிகளும் நடைபெற்றதால் திருமங்கலம் ஆர்வி பட்டி இடையிலான இந்த தடத்தில் மட்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மதுரை திருமங்கலம் புதிய இரண்டாவது அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நாளை மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது.

தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அலுவலர் குப்தா அவர்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளார். இந்த அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் வேளையில் பொதுமக்கள் ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய அகல ரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று மதுரை ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Train