ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிப்ரவரி மாதம் வந்தாலே நாம் அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருப்போம். காதலித்தவர்கள் காதலை தெரிவிக்க காத்திருப்பவர்கள் என எல்லோரும் தனது காதலிக்காகவும் காதலனுக்காகவும் விதவிதமான கிஃப்ட் மற்றும் பொக்கே போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து கொண்டாடுவது வழக்கம் தான்.
அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணாநகரில் இருக்கக்கூடிய இடம் தான் ஸ்ரீ குரு மீனாட்சி பிளார் அண்ட் டெக்கரேஷன் ஷாப். இந்த கடையில் காதலர் தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண மற்றும் விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொக்கேக்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
நமது காதலி மற்றும் காதலனுக்கு எந்த கலர் பிடிக்குமோ அதற்கு ஏற்றார் போல இங்கு பொக்கேகள் கஸ்டமைஸ் செய்து தரப்படுகின்றது. இது போக இங்கு டைரிமில்க், கிட்கேட் போன்ற விதவிதமான சாக்லேட்களினாலும் செய்யப்பட்ட பொக்கேக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இங்கு ஆர்டர் கொடுத்தால் அதை மிகவும் அழகாக தயார் செய்து தருகின்றார்கள்.
ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai