மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தனது பத்து வயது முதல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் வளர்த்த மூன்று வயதான புலி குலம் வகையைச்சேர்ந்த வீரா என்ற ஜல்லிக்கட்டு காளை இந்த ஆண்டுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டது. திவ்யதர்ஷினியின் காளையான வீரா, வாடிவாசலில் சீறிப்பாய்ந்து இரண்டு தங்கநாணயங்கள் மற்றும் சைக்கிள் ஒன்றை பரிசாக தட்டி சென்றது.
காளை வளர்ப்பு பற்றியும் ஜல்லிக்கட்டிப் போட்டி குறித்தும் பேசிய திவ்யதர்ஷினி, ‘வீராவை முதன்முதலாக இந்த ஆண்டில் தான் அதுவும் அலங்காநல்லூரில் இறக்கினோம். 39-ம் எண்டோக்கன் கிடைத்தாலும் இவருக்கு வாடிவாசல் என்பது புதுசு என்பதால் இவர் என்ன செய்வார் என்றோ அல்லது வாடிவாசலை விட்டு சீறிப்பாய்வாரா என்ற பதற்றத்தோடு இருந்தேன்.
ஆனால் எனது வீரா அவரது அப்பாவை போல ஜெயித்து விட்டான். போன முறை அவனியாபுரத்தில் எனது காளையை இறக்கினேன். மாடு பிடிபட்டுவிட்டது. இருந்தாலும் எனக்கு ஆறுதல் பரிசு அளிக்க முன்வந்தார்கள்.வென்றுவிட்டு தான் பரிசுகளை வாங்குவேன் என்று நான் அதை மறுத்து விட்டேன்.
அதற்கு ஏற்றார் போல் இந்த ஆண்டு அலங்கநல்லூரில் வீராவின் வீரமான விளையாட்டால் வென்று அமைச்சர் மூர்த்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் கைகளால் இரண்டு தங்க காசுகள் மற்றும் சைக்கிள்களை பரிசாக தட்டிச் சென்றேன்.
வீராவுக்கு வாடிவாசல் முதல் முறை என்பது போல இல்லாமல் வீரர்களை வீழ்த்தி விட்டு பரிசுகளை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai