முகப்பு /செய்தி /மதுரை / 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மதுரை மத்திய சிறையில் 100% தேர்ச்சி

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மதுரை மத்திய சிறையில் 100% தேர்ச்சி

மதுரை மத்திய சிறை - 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

மதுரை மத்திய சிறை - 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண் உள்பட 24 பேர் உட்பட அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி இரண்டு வாரம் நடைபெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வில் மொத்தம் 9,38,291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், மதுரை மாவட்டத்தில் 38,063 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் மதுரை மத்திய சிறையில் 4 ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு நிகராக சிறைவாசிகளுக்கு கல்வி வழங்கப்பட்டது. குறிப்பாக, காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தினமும் பொதுத் தேர்வு எழுதும் சிறைவாசிகளுக்கு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வாரந்தோறும் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

இதையும் வாசிக்கசிவகங்கையில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்து சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்...

இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண் உள்பட 24 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதன்மூலம் மதுரை மத்திய சிறையில் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில்  சிறைவாசி அறிவழகன் என்பவர் 363 மதிப்பெண்களும், மற்றும் சிறைவாசி உதயகுமார் என்பவர் 360  மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், மதுரை மத்திய சிறையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 பேரில் 14 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result