முகப்பு /மதுரை /

உஷார்... வங்கி வாடிக்கையாளர்களுக்கு மதுரை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை

உஷார்... வங்கி வாடிக்கையாளர்களுக்கு மதுரை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

Madurai District | மதுரை மாவட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள், சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முன்னிலையில், நேற்று அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 850 மதிப்புள்ள, 927 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் இதுவரை ரூ.32,18,850 உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.சி.வி. எண் மற்றும் ஓ.டி.பி. போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இணையதள செயலிகளை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

Must Read : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்கை தொடவேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றுமாறு வரும் குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற நூதன மோசடியில் யாரேனும் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Cyber crime, Local News, Madurai, Police