முகப்பு /மதுரை /

‘கடைசி விவசாயி’ நல்லாண்டி தாத்தா சுவர் ஓவியம் - கௌரவித்த அரசுப் பள்ளிக்கு குவியும் பாராட்டு!

‘கடைசி விவசாயி’ நல்லாண்டி தாத்தா சுவர் ஓவியம் - கௌரவித்த அரசுப் பள்ளிக்கு குவியும் பாராட்டு!

'கடைசி விவசாயி' நல்லாண்டி தாத்தா ஓவியம்

'கடைசி விவசாயி' நல்லாண்டி தாத்தா ஓவியம்

Madurai : ‘கடைசி விவசாயி’ திரைப்பட நாயகர், மறைந்த நல்லாண்டி தாத்தாவின் ஓவியத்தை பள்ளி சுவரில் வரைந்து கௌரவப் படுத்திய உசிலம்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மிழில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்பட நாயகர் மறைந்த நல்லாண்டி தாத்தாவின் ஓவியத்தை பள்ளி சுவரில் வரைந்து கௌரவப் படுத்தியயுள்ள உசிலம்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரபல இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த கடைசி விவசாயி திரைப்படம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த  திரைப்படத்தின் நாயகனாக, பார்வையாளரை தன்பக்கம் ஈர்த்த இயல்புமிக்க தனது நடிப்பால் யதார்த்த பாங்கினை வெளிப்படுத்தியவர் பெருங்காமநல்லூர் நல்லாண்டி. இவரது நடிப்பை இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

திரைப்படம் வெளியாகும் முன்பே முதியவர் நல்லாண்டி மறைந்து விட்டார். அவர் இல்லாத சோகம் ஒருபுறம் இருப்பினும் அவரது நடிப்பை இப்போது வரை அந்தப் படம் பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவரது நடிப்பைக் கொண்டாடுவதன் ஒருபகுதியாகவும், அவரை கௌரவப் படுத்தும் நோக்கிலும் மதுரை உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் கடைசி விவசாயி நல்லாண்டி தாத்தாவின் ஓவியத்தை வரைந்துள்ளனர்.

சுவரில் 'கடைசி விவசாயி' நல்லாண்டி தாத்தா ஓவியம் - சபாஷ்... உசிலை அரசு பள்ளி
சுவரில் 'கடைசி விவசாயி' நல்லாண்டி தாத்தா ஓவியம்

மேலும், விவசாயம் சார்ந்த திருக்குறளுடன் விவசாயம் குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி சார்பில் வரையப்பட்டுள்ள இந்த கடைசி விவசாயியின் ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

விவசாயத்தின் அருமையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டிய கட்டாயம் இப்போது நிலவுகிறது. அதனை சரியாக முன்னெடுத்து உள்ளது இந்தப் பள்ளி என்பது கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

First published:

Tags: Govt School, Madurai, Usilampatti