முகப்பு /மதுரை /

மதுரை தல்லாகுளத்தில் சேஷசயன அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.. பக்தர்கள் பரவசம்..!

மதுரை தல்லாகுளத்தில் சேஷசயன அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.. பக்தர்கள் பரவசம்..!

தல்லாகுளம் பெருமாள்

தல்லாகுளம் பெருமாள்

7ஆம் நாள் இரவு சூர்னோசயம் நடைபெற்றது. பெருமாள், புஷ்ப விமானத்தில் காட்சியளித்தார்.

  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

புராட்டாசி மாதத்தையொட்டி மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் சேஷசயன அலங்காரத்தில் காட்சி அளித்தார் பெருமாள். 

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். அதிலும், தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாகும். இந்த மாதம் பெருமாளுக்கு மட்டுமின்று, நவராத்திரி நாயகிகளாகிய துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் மாதமாக கருதப்படுகிறது.

இந்த நாளில் பொதுவாக நெற்றியில் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் பெருமாளுக்கு பிடித்தமான பிற நைவேத்யங்களை செய்து பெருமாளை வழிபடுவது சிறந்தது.

இந்த நாளில் இடித்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய் கொண்டு அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவது சிறந்தது.

இந்த நாளில் கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று பெருமாளின் நாமங்களை கோஷமிட்டு பிறரிடம் தானமாகப் பெற்று பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவது சிறந்தது.

இதையும் படிங்க | லட்சக்கணக்கில் நிதியை பெற கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. இத மிஸ் பண்ணிடாதீங்க..!

மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கடந்த 26-ந் தேதி அக்குரார்ப்பணம், 27-ந் தேதி கொடியேற்றம், 28-ந் தேதி கிருஷ்ணாவதாரம், 29-ந் தேதி ராமாவதாரம், 30-ந் தேதி கஜேந்திர மோட்சம், 1-ந் தேதி ராஜாங்க சேவை நடந்தது.

6-ம் நாள் காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனாவதாரமும் நடந்தது. பெருமாள் யானை வாகனத்தில் காட்சி அளித்தார்.

top videos

    கோவிலில் 7-வது நாள் காலை சேஷசயனம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து இரவு சூர்னோசயம் நடைபெற்றது. பெருமாள், புஷ்ப விமானத்தில் காட்சி அளித்தார்.

    First published:

    Tags: Madurai