கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஏப்ரல் 2ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30ம் தேதிகள் மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகள் மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 9:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இதேபோல் மறுநாள் தாம்பரம் - திருநெல்வேலி வாரந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 3, 10, 17, 24ம் தேதிகள், மே 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகள் மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு காலை 10:40 மணிக்கு திருநெல்வேலி சென்று அடையும். மறுநாள் இந்த ரயில் சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், கிளக்கடையும், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும்” என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Southern railway