முகப்பு /மதுரை /

மதுரை, திருச்சி வழியாக கூடுதல் வாராந்திர சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

மதுரை, திருச்சி வழியாக கூடுதல் வாராந்திர சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Southern Railways | கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஏப்ரல் 2ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30ம் தேதிகள் மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகள் மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 9:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல் மறுநாள் தாம்பரம் - திருநெல்வேலி வாரந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 3, 10, 17, 24ம் தேதிகள், மே 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகள் மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு காலை 10:40 மணிக்கு திருநெல்வேலி சென்று அடையும். மறுநாள் இந்த ரயில் சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், கிளக்கடையும், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும்” என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Southern railway