முகப்பு /செய்தி /Breaking and Live Updates / ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர காதலன்!

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர காதலன்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அணுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.

போதைக்கு அடிமையான அணுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் இன்று காலை போதையில் இருந்த அணுதீப் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தி இருக்கிறார். அவர் சம்மதிக்கவில்லை. எனவே கோபமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்தார். ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்த அந்த மாணவி இன்று மதியம் பலத்த காயத்துடன் வீட்டுக்கு வந்து தன்னை அணுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரை செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.

இதற்கான காரணம் பற்றி பெற்றோர் விசாரித்த போது அனுதீப் தன்னை காதலித்ததாகவும், கல்லூரியில் இருந்து அழைத்து வந்து 15 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தார். மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

top videos

    படுகாயம் அடைந்த மாணவியை தற்போது ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர்.அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News