முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மதுவை பிரசாதமாக வழங்கும் கோவில்.. அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

மதுவை பிரசாதமாக வழங்கும் கோவில்.. அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

 கால பைரவர் கோயில்

கால பைரவர் கோயில்

பண்டிதர்களின் கூற்றுப்படி, பல அமைப்புகள் இந்த மர்மமான செயலில் ஆராய்ச்சியாளர்களை நிகழ்த்தியுள்ளன, ஆனால் யாராலும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. 

  • Last Updated :
  • Chennai, India

ஊருக்கு ஒரு கோவில் என்ற வீதத்தில்  இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதில் ஒரு சில கோவில்கள் அதன் கட்டுமான அழகியலால் பிரபலமாகும். ஒரு சில அதன் சொத்து மதிப்பில் பிரபலமாகும். ஒரு சில கோவில்களை அதன் வழிபாட்டு தெய்வங்களால் பிரபலமாகும். மிக சில கோவில்கள் தான் வழிபாடு முறைகளால் தனித்துவம் பெரும். அப்படி ஒரு கோவிலை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு மர்மமான பழங்கால  கால பைரவ நாத் என்ற இந்து கோயிலைக் கொண்டுள்ளது.  கால பைரவர் கோயிலில் என்ன பொய் வித்தியாசம் என்று தானே நினைக்கிறீர்கள். பேருந்து முதல் படத்தின் தொடக்கம் வரை மது வீட்டிற்கும் நாட்டிற்கு கேடு என்று எழுதும் வேளையில் இந்த அக்கோவிலில் பூஜை பொருள், பிரசாதம் எல்லாமே மதுதானாம். இப்போ இது வித்தியாசமான கோவில் தானே?

உஜ்ஜைன் நகரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் இந்த கோவில் மிகவும் பழமையானது மற்றும் பத்ரசேனன் மன்னனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் எல்லோரும் தங்களது அர்ச்சனை தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்குடன் மது பாட்டில்களை எடுத்து செல்கிறார்கள்.

பக்தர்கள் தரும்  மதுபாட்டில்கள் கடவுளுக்கு முக்கிய காணிக்கையாக வழங்கப்படுகிறது.  கால பைரவர் சைவ மரபின் எட்டு பைரவர்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது. சிவனின் உக்கிர ரூபமாக கருதப்படும் காலபைரவர் அஷ்ட பைரவர்களில்  மிக உக்கிரமான வெளிப்பாடு.

தாந்த்ரீக வழிபாட்டால் வணங்கப்படுகிறார். அதனால் தான் இவருக்கு மது வழங்கப்படுகிறது. இந்த கோவிலின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து கோவிலுக்கு நடக்கத் தொடங்கும்போதே, தெருவோர வியாபாரிகள் பொது இடங்களில் மதுபானம் விற்பதைக் காணமுடியும்.

உள்ளூர் மதுபானம் முதல் வெளிநாட்டு  ஒயின்கள் மற்றும் விஸ்கி வரை அனைத்து வகைகளையும் வெளிப்படையாக விற்கப்படுகிறது. பூஜைப் பொருட்களுடன் பூசாரியிடம் ஒப்படைக்கப்படும் மது பாட்டிலைத் திறந்து, பாதி உள்ளடக்கத்தை சிலையின் வாய்க்கு அருகில் வைக்கப்பட்டுள்ள  தட்டில் வைக்கின்றனர்.

தட்டில் வைக்கப்பட்டுள்ள மது  மெதுவாக குறையத் தொடங்குகிறதுமுழுவதும் காலியானதும் பூசாரி தட்டை திரும்ப எடுத்துக்கொள்கிறார். இதை மிக அருஇல் இருந்து பக்தர்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த மது எப்படி காலியாகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.  இது பல நூற்றாண்டுகளாக நடந்து வகுகிறது. மர்மமாக இருந்தும் இந்த நிகழ்ச்சி உண்மையாக நிகழ்கிறது.

பண்டிதர்களின் கூற்றுப்படி, பல அமைப்புகள் இந்த மர்மமான செயலில் ஆராய்ச்சியாளர்களை நிகழ்த்தியுள்ளன, ஆனால் யாராலும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, தந்துகி நடவடிக்கை மூலம் பிரசாதத் தட்டில் இருந்து மதுவை இழுக்க முடியும். 1995ல் டெல்லியின் விநாயகப் பெருமானின் பால் அதிசயம் இப்படி தான் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இங்கு அதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இதையும் பாருங்க : உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ஸ்தூபி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கோங்க..!

காணிக்கையாக வழங்கப்டும் மது பாட்டில்களில் எஞ்சியிருப்பவை பக்தர்களுக்கு பிரசாதமாகத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுவாக பொறி, கடலை, விபூதி, குங்குமம், பொங்கல், சுண்டல் தான் பிரசாதமாக வழங்கப்படும்.  அனேகமாக, கோவிலில் மது பிரசாதம் வழங்கப்படும் ஒரே கடவுளாக இந்த கோவில் இருக்கலாம்.

top videos

    ஸ்கந்த புராணத்தின் அவந்தி காண்டத்திலும் இந்த கால பைரவர் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். கால பைரவரின் வழிபாடு இந்திய மதத்தில் உள்ள கபாலிகா மற்றும் அகோரா பிரிவினரின் ஒரு பகுதியாக இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவில் மாநில தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இப்போது உள்ளது.

    First published:

    Tags: Hindu Temple, Temple, Travel, Ujjain S12p22