சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், விரைவில் செரிமானமாகும்படியும் உணவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் இரவில் மிதமான உணவுக்கு பெரும்பாலானோர் சப்பாத்தியை தேர்வு செய்கிறார்கள். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அப்படி சப்பாத்தி சுடும்போது அதில் முருங்கை இலையும் சேர்த்து திரட்டி கொடுத்தால் கூடுதல் பலன். அதாவது முருங்கை இலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அதிக ஆற்றலை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் வல்லமை பெற்றது. இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.
அதாவது அந்த ஆய்வில் சுமார் 7 கிராம் முருங்கை இலை பொடி சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுடைய சர்க்கரை அளவு சராசரியாக 13.5 சதவீதம் குறைந்திருந்தது. அதேபோல் மற்றொரு ஆய்விலும் 50 கிராம் முருங்கை இலை கொடுக்கப்பட்டதில் 21 சதவீதம் குறைந்திருந்தது.
பின் அந்த ஆய்வுகளில் சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் அளவையும், புரதத்தையும் குரைக்கும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை இலை சிறந்த மருந்து என்றும் கூறியுள்ளனர். எனவே இத்தகைய நன்மைகளை கொண்டிருக்கும் முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். சரி முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chapathi, Diabetes, Drumstick Leaves