தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் நண்டு சூப் செய்து சாப்பிட்டால் போதும்.. நல்ல நிவாரணம் கிடைக்கும் . பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த நண்டு சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது. கிராமங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த நண்டு சூப் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 2
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
பட்டை - தேவையான அளவு
பிரியாணி இலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.
2.அதனுடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
3.நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது குடிக்கும் தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.
தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.
4. நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போட்டு நன்றாக கிளறவும்.
5. நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.
6. இதோ சுவையான நண்டு சூப் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Soup