கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாடபதி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (25) திருப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு தன்னுடன் வேலை பார்க்கும் அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அனுஷா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுபாஷின் தந்தை தண்டபானி இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த சுபாஷ், அனுஷா மற்றும் அவரது தாய் கண்ணம்மா(65) ஆகிய மூன்று பேரை வெட்டியதில் சுபாஷ், கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த அனுஷா (23) ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : குமரேசன் - (கிருஷ்ணகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Double murder, Krishnagiri