இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்களை கிறிஸ்தவ மக்கள் நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளைகடைபிடித்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் சிஎஸ்ஐ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ளை ஆடைகளை அணிந்தபடி குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல்கள் பாடி அந்த நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு பெற்று வழிபாடு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News