முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / பாலியல் புகார்- பாதிரியார் பெனடிக் ஆண்டோவை காவலில் எடுத்துவிசாரிக்கும் காவல்துறை

பாலியல் புகார்- பாதிரியார் பெனடிக் ஆண்டோவை காவலில் எடுத்துவிசாரிக்கும் காவல்துறை

பாதிரியார் பெனடிக்

பாதிரியார் பெனடிக்

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்டோவை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக் ஆண்டோவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆண்டோ. அவருக்கு வயது 30. இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில்  பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை என்னும் பகுதியில் உள்ள  தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். இந்நிலையில் பாதிரியார் பெனடிக் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும் உடலில் மோசமாக தொட்டதாகவும் பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும் அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறி உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக் ஆண்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவை தனிப்படை  அமைத்து  தேடி வந்தனர். இந்நிலையில் பாதிரியார் கடந்த 20 ஆம் தேதி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. பெண் காவலர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி!

top videos

    தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் பாதிரியாரை மீண்டும் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியாரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின் மீண்டும் இன்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Kanniyakumari