கன்னியாகுமரி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நேரில் வந்து காலியிடங்கள் உள்ள தொழில் பிரிவைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோருக்கு வயது வரம்பு ஆண்களுக்கு14 முதல் 40 வரை; பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம்தோறும் ரூபாய் 750 வழங்கப்படும் மற்றும் பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடை , 1 செட் காலணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Nagercoil