காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருஅவதார நாளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார் ராமானுஜ பெருமான். திரளான பக்தர்கள் தரிசனம் செய்து தீர்த்தம் சடாரி பெற்றுச் சென்றனர்.
எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தான் ஒருவன் மட்டும் நரகத்திற்கும் சென்றாலும் பரவாயில்லை என்று கூறி, அனைத்து தரப்பு மக்களும் அறியும் வண்ணம் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டு எழுத்து மந்திரத்தை எல்லோருக்கும் எடுத்து உரைத்து, ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் சமத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டி ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஆழ்வாரான ராமானுஜர் அவதாரத் திருநாள் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வெகு விமர்சையாக வைணவ திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது.
இதன்படி, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் கோவில் என அறியப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கும் ராமானுஜருக்கு ஐந்தாம் நாள் உற்சவத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருவாபரணங்கள், மலர் மாலைகள் அணிவித்து பக்தர்களுக்கு காட்சியளிக்க எழுந்தருள செய்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஐந்தாம் நாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜருக்கு செய்யப்பட்ட தூப தீப ஆராதனைகளில் கண்டு களித்து சுவாமியை வணங்கி சடாரி தீர்த்தம், பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். ராமானுஜ திரு அவதார உற்சவத்தின் முக்கிய விழாவாக வரதராஜ பெருமாள், தான் உகந்த மேனியான் ஆன ஸ்ரீ உடையவர் என அழைக்கப்படும் ராமானுஜருக்கு காட்சி அளித்து ஆசி வழங்கும் ஸ்ரீ உடையவர் சாற்றுமுறை உற்சவம் வரும் 25-04-23 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News