முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

Kanchipuram Kamakshi Amman Temple : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம் நடைபெற்றது.

சக்தி தலங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையையொட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து,அரக்கு நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்து, நீல நிற பட்டு உடுத்திய லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

இதையும் படிங்க : காஞ்சிபுரத்தில் மனுநீதி நாள் முகாம்.. 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

பின்னர் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News