முகப்பு /காஞ்சிபுரம் /

வெள்ளியினாலான சந்திர பிறை வாகனத்தில் கம்பீரமாக ராஜ வீதிகளில் வீதி உலா வந்த காமாட்சி அம்மன்

வெள்ளியினாலான சந்திர பிறை வாகனத்தில் கம்பீரமாக ராஜ வீதிகளில் வீதி உலா வந்த காமாட்சி அம்மன்

X
காஞ்சி

காஞ்சி காமாட்சி

Kanchi kamachi amman | காஞ்சிபுரத்தில் வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் ராஜ வீதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கம்பீரமாக வீதி உலா வந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 25 தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி நடைபெற்ற இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், குருவி வேர் கருப்பு மாலை, மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து, தலை கீரிடத்தில் தாழம்பூ சூடி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், 30 கிலோ வெள்ளியில் இந்த ஆண்டு புதிதாக செய்யப்பட்ட சந்திர பிறை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News