முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் களைகட்டும் மாசி பிரம்மோற்சவம்.. நாக வாகனத்தில் பவனி வந்த காமாட்சி அம்மன்..

காஞ்சியில் களைகட்டும் மாசி பிரம்மோற்சவம்.. நாக வாகனத்தில் பவனி வந்த காமாட்சி அம்மன்..

X
காஞ்சியில்

காஞ்சியில் களைகட்டும் மாசி பிரம்மோற்சவம்

Kanchi Kamatchi Amman Temple |காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் இரவு உற்சவம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நாக வாகனத்தில் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் ராஜவீதிகளில் வீதி உலா வந்தார்.

சக்தி பீட தலங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி நடைபெற்ற 5ம் நாள் இரவு உற்சவத்தில் நீலநிறப் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து ரோஜா, மல்லிகை, மலர் மாலைகள் சூடி, லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன், அன்னை காமாட்சி நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள், வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தார். இவ்வாறு நாக வாகத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News