முகப்பு /காஞ்சிபுரம் /

உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

X
காமாட்சி

காமாட்சி அம்மன் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றும் ஸ்தானிகர்கள் 

Kancheepuram Brahmotsavam at Kamachi Amman temple | மாசி பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் மார்ச் 1ம் தேதி நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சக்தி ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கோயில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறை, ஏலக்காய் மாலை மற்றும் பிங்க் வண்ண பட்டு உடுத்தி அழகான சிரித்த முகத்துடன் அம்பாள் காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க கொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோவில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர்.அப்போது மேளதாளங்கள் முழங்க இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் மார்ச் 1ம் தேதியும்,ரத உற்சவம் மார்ச் 3ம் தேதியும், வெள்ளிதேர் உற்சவம் மார்ச் 5ம் தேதியும் நடைபெறும்,

மார்ச் மாதம் 8 ஆம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

First published:

Tags: Kancheepuram, Local News