முகப்பு /காஞ்சிபுரம் /

ஏலக்காய் மாலை அணிந்து வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்..

ஏலக்காய் மாலை அணிந்து வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்..

X
ஏலக்காய்

ஏலக்காய் மாலை அணிந்து வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

Kanchi Kamatchi Amman Temple : ஏலக்காய் மாலை அணிந்து வயலட் நிற பட்டு உடுத்து வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஏலக்காய் மாலை அணிந்து வயலட் நிற பட்டு உடுத்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்றதுமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.  இதனையொட்டி நடைபெற்ற முதல் நாள் உற்சவத்தில் வயலட் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மனோரஞ்சித பூ,ஏலக்காய் மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து, ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடிகிளும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News