முகப்பு /காஞ்சிபுரம் /

பட்டு நகரை உணர்த்தும் வகையில் பட்டு நூல் மாலை அணிந்து உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

பட்டு நகரை உணர்த்தும் வகையில் பட்டு நூல் மாலை அணிந்து உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

X
தங்க

தங்க மான் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் 

Kanchipuram at Kamachi Amman Temple | காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

பட்டு நகரை உணர்த்தும் வகையில் பட்டு நூல் மாலை அணிந்து காஞ்சி காமாட்சி அம்மன் வீதி  உலா வந்து பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக தொடங்கியது.

பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி நடைபெற்ற முதல் நாள் இரவு உற்சவத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பட்டு நகரை உணர்த்தும் வகையில் பட்டு நூல் மாலை அணிந்து அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தங்க மான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மேள தாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர, காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News