மாசி மாத பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் இரவுவில் காஞ்சி காமாட்சி அம்மன் தங்க காமகோடி விமானத்தில் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சக்தி பீட தலங்களில் ஒன்றாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற 12ஆம் நாள் இரவு கடைசி வீதி உலாவின்போது பச்சை, சிகப்பு நிறபட்டு உடுத்தி, வைரவைடுரிய திருவாபரணங்கள் அணிந்து, தாமரைப், மனோரஞ்சிதம், செண்பகப் பூ, மற்றும் மல்லிகை மலர் மாலைகளை சூடி,காஞ்சி காமாட்சியம்மன் தங்க காமகோடி விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் மேள தாளங்கள், நாதஸ்வரம்,பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் தங்க காமகோடி விமானத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மனை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News