முகப்பு /காஞ்சிபுரம் /

ஏலக்காய் மாலையுடன் தங்கக்கிளி வாகனத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

ஏலக்காய் மாலையுடன் தங்கக்கிளி வாகனத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

X
தங்கக்கிளி

தங்கக்கிளி வாகனத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி

Kanchipuram News : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஏலக்காய் மாலையுடன் தங்கக்கிளி வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் 6ம் நாள் இரவு, பச்சை நிறப்பட்டுடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதம், செண்பகப்பூ மாலைகள் அணிந்து, பச்சைக் கிளி கட்டிய ஏலக்காய், கிராம்பு மாலை சூடி, காஞ்சி காமாட்சியம்மன் தங்க கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள், வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் தங்க கிளி வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News