முகப்பு /காஞ்சிபுரம் /

கையில் வீணையுடன், தங்க ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி!

கையில் வீணையுடன், தங்க ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி!

X
தங்க

தங்க ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் 

Kanchipuram kamatchi amman temple festival | காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி நடைபெற்ற நான்காம் நாள் இரவு உற்சவத்தில் பச்சை கறை வெண் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து செண்பகப் பூ, மல்லிகைப்பூ, மலர் மாலைகள் சூடி, கலைமகள் கோலத்தில் கைகளில் வீணையுடன் காஞ்சி காமாட்சியம்மன் தங்க ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள்,பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.

ராஜ வீதிகளில் தங்க ஹம்ச வாகனம் மீது வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Festival, Kanchipuram, Local News