காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,பயனாளிகளுக்கு ரூ.13,00,500 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 235 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேலும்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,காஞ்சிபுரம் நகரம் மற்றும் காரைப்பேட்டை பகுதிகளில் வசித்து வரும் இருளர் இன மக்கள் 15 குடும்பங்களுக்கு ரூ.13,00,500/- மதிப்பில் புஞ்சையரசன்தாங்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா,உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித்ஜெயின்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News