முகப்பு /காஞ்சிபுரம் /

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வெட்டப்பட்ட குளம்!

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வெட்டப்பட்ட குளம்!

X
தேவரியம்பாக்கம்

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வெட்டப்பட்ட குளம்

Thondakulam Village Pond Reconstruction : காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தோண்டாங்குளம் கிராமத்தில், குளம் வெட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தோண்டாங்குளம் கிராமத்தில்,சிவன் கோவில் குளம் பல ஆண்டு காலத்துக்கு முன்பு வரை இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் சிவன் கோவில் குளமானது காணாமல் போய் சமதளமாக காலி நிலம் போல் இருந்து வந்தது.

இந்நிலையில், காணாமல் போன சிவன் கோவில் குளத்தை மீண்டும் வெட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்திடம் குளம் வெட்டுவதற்கான அனுமதியைப் பெற்றார்.

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வெட்டப்பட்ட குளம்

இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாஷ்(BOSCH) என்ற தனியார் தொழிற்சாலையின் நிர்வாகத்தை அணுகி சிவன் கோவில் குளத்தை வெட்டி தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகம் குளம் வெட்டி தர தனது சமுதாய மேம்பாடு நிதியில் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியது.

இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் கிராம மக்கள் ஒன்றினைந்து தோண்டங்குளம் கிராமத்தில் சமதளமாக இருந்த சிவன் கோவில் குளத்தை மீண்டும் குளமாக வெட்டி,நீர் வரத்து கால்வாய் ஏற்படுத்தி, குளத்தை சுற்றி வர கிராம மக்கள் தங்களின் சொந்த நிலத்தை தானமாக வழங்கி, பாதை அமைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து குளத்தை மீட்டெடுத்தனர்.

இதை தொடர்ந்து மீட்டெடுக்கப்பட்ட சிவன் கோவில் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா தோண்டாங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாஷ்(BOSCH) தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குளத்தினை திறந்து வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் தலைவர் எல்லப்பன், வார்டு உறுப்பினர்கள் சூரியகாந்தி, பூபதி, சாந்தி, ஞானவேல், கற்பகம், மற்றும் கிராம பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News