காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு வீல்சேர் பென்சிங் ஃபெடரேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான, மாநில அளவிலான 14வது வீல்சேர் வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த வீல்சேர் வாள்வீச்சு போட்டியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழும் மற்றும் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News