காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கியது முதலே அதிமாக இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.
கோடை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய, தற்காப்பு வழிமுறைகளை எடுத்துரைத்துள்ள காஞ்சிபுரம் கலெக்டர், பொதுமக்கள் இவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க, செய்ய வேண்டியவை, வெயிலில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறைகள் பின்வருமாறு:-
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.
வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கான வழிமுறைகள்:
குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும்.
நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை விட்டு செல்ல வேண்டாம்.
இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள்.
குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும்.
குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க
முதியவர்களுக்கான வழிமுறைகள்:
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கான வழிமுறைகள்:
கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும்.
அவசியமாக, போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம்.
அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.
பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து, போதுமான நீர் கொடுக்க வேண்டும்.
செல்லப் பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.
இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News