பனிக்காலமான மார்கழி மாதம் முடிவடைந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை வேலைகளில் பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருகிறது. அதன்படி அதிகாலையில் பெய்துவரும் பனிப்பொழிவால் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் காட்சி அளித்து வருகிறது. இருந்தாலும் அதிகாலையில் ஏற்படும் பனிப்பொழிவின் காரணமாக பல்வேறு பணிகளுக்காக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாமலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படியும் தான் வாகனங்களை இயக்குகின்றனர். மேலும் தொடர் பனிப்பொழிவின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் முதியவர்களும் குழந்தைகளும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அதிக அளவில் வருகை தருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News