காஞ்சிபுரத்தில் விடிவதற்கு முன்பே நடைமேடை மின்விளக்குகளை ரயில்வே நிர்வாகம் அணைத்து விடுவதால் பயணிகள் இருட்டிலேயே நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கிழக்கு ரயில் நிலையம் பகுதியில் இருந்து அதிகாலை 5 மணி, 6 மணி, 7மணி என அடுத்தடுத்து காலை வேளைகளில் ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ரயில்வே நடைமேடையில் நீண்ட தூரத்துக்கு காத்து நிற்கின்றனர்.
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் விடிவதற்கு முன்பாகவே ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை மின்விளக்குகள் அனைத்தும் நாள்தோறும் அணைக்கப்பட்டுவிடுகிறது.
நடைமேடை பகுதியில் மின்விளக்கு எரியாததால் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்திற்கு பயணம் செய்ய வரும் பொதுமக்கள் இருட்டிலேயே நடந்து சென்று தங்களின் உடைமைகளுடன் நடை மேடையில் காத்திருக்கின்றனர்.
மின்விளக்குகள் எரியாததின் காரணமாக குற்றச்சம்பவங்கள் ஏதேனும் தங்களுக்கு நடந்து விடுமோ என்ற அச்சத்துடனே பெண்கள், முதியவர்கள், ரயில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அசாதாரண சூழல் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News