காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வெள்ளாரை கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் 50 சென்ட் நிலத்தை கிரயம் பெற்று பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இந் நிலையில் பத்திரப்பதிவு செய்த நிலத்திற்கு பட்டா கேட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மனு வழங்கி வருகிறார். மனுவினை பெற்றுக் கொள்ளும் வருவாய் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும், பட்டா வழங்குவதற்கு நில அளவையர் லஞ்சம் கேட்பதாகவும், கூறி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், திடீரென நீலகண்டன் தான் கொண்டு வந்திருந்த பிளேடால் கையை கிழித்துக்கொண்டு, மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் நீலகண்டனை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கனிமவளத்துறை அதிகாரி முறைகேட்டில் ஈடுபடுவதாக காஞ்சிபுரம் ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் புகார்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News