தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி புத்தாண்டைகள் அணிந்து புது பானையில் பொங்கல் வைத்து படையல் இட்டு சூரிய பகவானை வணங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி புத்தாடைகள், துணிமணிகள் உள்ளிட்டவற்றை தங்கள் குடும்பத்தினருக்கு வாங்கி கொடுத்து மகிழ்ந்திட காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் காந்தி சாலையில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளிலும், சாலை ஓர கடைகளிலும் தங்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகளை வாங்கிச் சென்று வருகின்றனர். புத்தாடைகள் வாங்கிட ஏராளமானோர் ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் பகுதியில் குவிந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News, Pongal 2023