தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்து கொண்ட தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.
பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டு நடந்து சென்றார்.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க துவங்கிய பேரணி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது.
பேரணியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கியபடி சென்றனர்.
காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News