காஞ்சியில் மனுநீதிநாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ₹4,39,85,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வட்டம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 305 பயனாளிகளுக்கு ரூ.4,39,85,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இதில் வருவாய்த்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா 196 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித் தொகை 33 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1.32 இலட்சம் மதிப்பில் பாரத சுகாதார இயக்கத்தின் கீழ் கழிப்பறை வசதி 11 பயனாளிகளுக்கும், ரூ.16.80 இலட்சம் மதிப்பில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் 7 பயனாளிகளுக்கும், ரூ.18.60 மதிப்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்கு வங்கிக் கடனும், மாவட்ட தொழில் துறை சார்பில் ரூ. 4.70 இலட்சம் மதிப்பில் தொழில் வங்கிக் கடன் உதவி 5 பயனாளிகளுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.24,000/- மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் 5 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.3.64 இலட்சம் மதிப்பில் பயிர்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மத்திய காலக்கடன் 6 பயனாளிகளுக்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளும், மொத்தம் 305 பயனாளிகளுக்கு ரூ.4,39,85,000/-மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் இம்மனுநீதி நாள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், இம்முகாம் அனைத்து மாவட்டங்களிலும், அதன் ஒன்றியங்களில் மாதத்திற்கு ஒரு முறை மனுநீதி முகாம்கள் நடத்தி, இந்நிகழ்ச்சியில் பெறுகின்ற மனுக்களை ஆய்வு செய்து முக்கிய பிரச்சனைகள், விரைவில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து மக்களுடைய பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய, வாழ்வு உயர வேண்டும் என்ற நல்ல நோக்கில் இம்மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!
இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News